வெசாக் வாரத்திலும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்
எதிர்வரும் விசாக (வெசாக்) பண்டிகை வாரத்தில் நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை தளர்த்தப்படவுள்ளது.
இதன் பின்னர் அடுத்த வார இறுதியில் மீண்டும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அது வெசாக் வாரம் நிறைவடையும் வரை அமுல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
நாட்டில் தற்போது காணப்படும் கோவிட் பரவல் காரணமாக வெசாக் வாரம் முழுவதும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் பயண கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாாக கூறப்படுகிறது.