கொழும்பு - வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
25 தொடருந்து சேவைகள் இரத்து
பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும்.

இதற்கமைய கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினம் 25 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri