யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரிவு
40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமையில் கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரிவானது யுத்தத்திற்கு முன்னர் இயங்கி வந்த நிலையில் யுத்த காலத்தில் இடை நிறுத்தப்பட்டது.
யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு
இவ்வாறான பின்னணியில் இன்று மீண்டும் அந்த பிரிவானது, வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

4 தசாப்தங்களாக தலைமை காரியாலயத்தில் பெறக் கூடியதாக இருந்த சர்வதேச பிரிவின், சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிதிசார் சேவைகளை இன்றுமுதல் யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.
பின்னர் சர்வதேச பிரிவானது நாடா வெட்டி வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை வங்கியின் யாழ். தலைமை காரியாலய முகாமையாளர் நே.சுஜாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் வடக்கு மாகாண உதவி முகாமையாளர் வீ.சிவானந்தன் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை வங்கியின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam