தொடருந்து தாமதமடைந்தமையினால் பலரையும் கவர்ந்த வெளிநாட்டவர்களின் செயல்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு சென்ற பொடி மெனிக்கே தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து எல்ல தொடருந்து நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு குழுவினரின் செயற்பாடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொடி மெனிகே தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகும் என்று நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களின் செயல்
இதனையடுத்து, தொடருந்து வரும் வரை நிலையத்தின் ஒரு பக்கத்தில் கூடியிருந்த அனைத்து வெளிநாட்டினரும் பாடல்களை பாடி நடனமாடியுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2:55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை அடைய வேண்டிய தொடருந்து , மாலை 4.55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை நிலையத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.



