வவுனியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
வவுனியா - ஓமந்தை பகுதியில் தொடருந்துடன் பிக்கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது.
மன்னார் - நானாட்டன் பகுதியைச் சேர்ந்த ராஜன் நிரோஜன் என்ற 32 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து கடவையில் விபத்து
கடந்த சனிக்கிழமை வவுனியா - யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்துடன் ஓமந்தை - பன்றிகெய்தகுளம் பகுதியில் தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே, அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri