ஒடிசா தொடருந்து விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்-செய்திகளின் தொகுப்பு
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் மூன்று தொடருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18க்கும் மேற்பட்ட தொடருந்து பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு தொடருந்து, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா தொடருந்து நிலையம் அருகே நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,