புகையிரதத்தில் மோதி ஒருவர் பரிதாப மரணம்
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் இன்று (9) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.