கப் ரக வாகனம் மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு
காலி மாவட்டத்தின் பிட்டிகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த வீதி, உஹன்ஒவிட்ட பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் பாதுகாப்பின்றி மிக வேகமாகப் பயணித்த கப் ரக வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மானம்பிட்டிய, ஹத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பிட்டிகல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.