பரந்தன் - முல்லைத்தீவு வீதி தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
பரந்தன் முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் பொதுமக்களுக்கு மிக முக்கியமான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள பாலத்தில் விதிக்கப்பட்ட கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது.
இப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தமை தாங்கள் அறிந்ததே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை
இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கீழ் குறிப்பிடப்பட்டவாறு மட்டுப்படுத்தப்படுகின்றது.

பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும் இப்பாலத்தினூடாக பயணிப்பது முற்றாக தடைசெய்யப்படுகின்றது.
பயணிகள் பேருந்து சேவையானது பயணிகளை இறக்கி விடப்பட்டு பின்னர் பாலத்தினூடாக பயணிக்க முடியும்.
ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் பயணிக்க முடியும் எனவே நிலைமையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மேற்படி அறிவுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan