சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,979 ஆகும். இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.7% சதவீத வீழ்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.அதன்படி இந்தியாவில் இருந்து மாத்திரம் 47,533 (26%) பேர் இலங்கை வந்துள்ளனர்.
வீழ்ச்சி
அத்துடன் மார்ச் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 18,092 பேரும், ரஷ்யாவிலிருந்து 15,685 பேரும், ஜேர்மனியிலிருந்து 13,429 பேரும், சீனாவிலிருந்து 14,064 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து 8,359 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, 2026 ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 740,634 ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri