திலினி பிரியமாலி மோசடி செய்த மொத்த பணத் தொகை! கோடிக்கணக்கான பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாரியளவில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மோசடி செய்த பணத்தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கோடிக்கணக்கான பண மோசடி
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய 128 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை அவர் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
திலினி பிரியமாலிக்கு எதிராக மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
