இலங்கைக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து அதிகளவான டொலர்கள் கிடைக்கின்றன...! அரசு வெளியிட்ட தகவல்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில், இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை அனுப்புபவர்கள் குவைத் நாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
அந்நிய செலவாணி
அவர்களில் சுமார் 30 சதவீதமானோர், கிட்டத்தட்ட 80,000 பேர் குவைத் நாட்டையே தெரிவு செய்கின்றனர்.

கடந்தாண்டில் மட்டும் குவைத்தில் உள்ள இலங்கையர்களால் 893 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலவாணியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டாவது அதிகளவிலான வெளிநாட்டுப் பணம் கத்தார் நாட்டிலிருந்தும், மூன்றாவது அதிகளவிலான பணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்தும் கிடைக்கின்றது.
அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள்
இதற்கு மேலதிகமாக, சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
H27LAV
மேலும், இத்தாலி, பிரித்தானியா, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித்தரும் இலங்கையர்கள் வாழும் ஏனைய முக்கிய நாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam