நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்துள்ள வெப்பநிலை
நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 (°C) ஆக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வெப்பநிலை இதற்கமைய கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 (°C) ஆக காணப்படும்.
இதேவேளை அனுராதபுரம்,காலி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 (0C) ஆக காணப்படும் எனவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
மட்டக்களப்பு 30 (°C), கண்டி 31 (°C), மன்னார் 33 (°C) ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை சற்று அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி
இதேவேளை நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.