நாடாளுமன்றில் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வார்த்தை மோதல்
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதாராச்சி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
தனது பல நாள் படகுகளுக்கு மானியமாக நாடாளுமன்ற உறுப்பினர் வேதாராச்சி 42,000 மற்றும் 52,000 ரூபாய்களை பெற்றதாக அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீங்கள் மானியங்களைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் பொய்களைச் சொல்கிறீர்கள். இது அநாகரிகமானது" என்று பிரதி அமைச்சர் கூறினார்.
மாதாந்த மானியம்
“இந்த கருத்தை நிரூபிக்க எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன, எங்களை எதிர்கொள்ளத் துணியாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.
பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேதாராச்சி, ஒரு முறை மட்டுமே மானியம் பெற்றதாகக் கூறினார். "எனக்கு மானியம் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டது. இருப்பினும், மாதாந்த மானியத்தைப் பெற எனக்கு உரிமை உண்டு" என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
