மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு

Gajendrakumar Ponnambalam Sri Lanka Sri Lankan political crisis
By Bavan Dec 23, 2023 08:53 PM GMT
Report

மேய்ச்சல்தரை மக்களுடைய போராட்டம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

மேலும், வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக முக்கியமான புள்ளி என்பதை விளங்கி முஸ்லிம் மக்களது பங்களிப்பும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை பகுதியில் இருந்து சிங்கள குடியேற்றத்தை வெளியேற்ற கோரி பண்ணையாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 100 ஆவது நாள் போரட்டதினமான இன்று (23.12.2023)மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது


குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள மயப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டு மேச்சல் தரையான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை ஒட்டு மொத்தமாக சிங்கள மயப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கையாக பார்க்கின்றோம்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

இதற்கு முன்பாக திருகோணமலை, அம்பாறை தமிழர்களின் கைகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். அதில் மிஞ்சி இருந்தது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான்.

ஆனால் அந்த மாவட்டத்தை இன்று மிக தீவிரமாக வந்து சிங்கள மயப்படுத்துவதற்குரிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய வேலைத் திட்டத்தின் முக்கியமான அங்கமாக இந்த மயிலத்தமுடு மாதவனை மேச்சல் தரையில் பண்ணையாளர்களை அப்புறப்படுத்தி அந்த நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்றி சிங்கள குடியேற்றத்தை குடியேற்ற செயற்படுத்துக்கின்ற செயற்திட்டமாகும்.

சட்ட விரோதமாக தங்கம் கடத்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபா அபராதம்

சட்ட விரோதமாக தங்கம் கடத்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபா அபராதம்


பொருளாராத ரீதியாக அங்கு குடியேற்றப்படுகின்ற சிங்கள மக்களுக்குரிய அடிப்படை வசதிகளும் பொருளாராத ரீதியாக அவர்களை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இன்று நடைமுறையில் வந்து ஒரு முக்கியமான கட்டத்தை வந்தடைந்துள்ளது.

அபிவிருத்தி திட்டம் 

சர்வதேச நிறுவனங்களின் நிதி பங்களிப்போடு மாதுறு ஓயா வலதுகரைவாய்க்கால் அபிவிருத்தி திட்டம் கனிசமான அளவிற்கு முன்னேறி அந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்காக சிங்கள குடும்பங்களை குடியேற்றங்களை கொண்டுவந்து அந்த அபிவிருத்தி திட்டம் ஊடாக அனைத்து நிலங்களையும் சிங்கள மயமாக்கும் திட்டம்தான் இன்று மேய்ச்சல் தரையில் இருந்து பண்ணையாளர்களை துரத்துகின்ற அவர்களது பொருளாதாரத்தை அழிக்கின்ற ஆரம்பகட்டமாக இருக்கின்றது.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

ஆகவே இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் என்று நிரூபிக்க கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தை எக் காரணம் கொண்டும் இழக்க விடக்கூடாது. அந்தவகையில் சகோதர முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது இன்று மட்டக்களப்பை நாங்கள் கைவிட்டால் இதனை சிங்கள தேசம் ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்ககூடாது.

மேச்சல் தரையில் கால்வைத்து அதை சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கி திருகோணமலையில் சேருநுவரவில் நடைபெற்றவாறு குறியேற்றி எண்ணிக்கை வந்ததின் பிற்பாடு ஏனைய இடங்களில் நுழைவதற்கான அத்திவாரத்தை பொறுகின்ற வேலைத்திட்டமாகும்.

இலங்கையில் மக்களின் கண்ணுக்கு தெரியாத பெரும் ஆபத்து (Video)

இலங்கையில் மக்களின் கண்ணுக்கு தெரியாத பெரும் ஆபத்து (Video)


போர்காலத்தில் இலங்கை அரசுடன் நின்ற போதும் கூட பேர் முடிந்த கையுடன் குறிவைத்த இனம் முஸ்லிம் மக்கள். ஆகவே முஸ்லிம் மக்களும் விளங்கி கொள்ளவேண்டும்.

மொழி என்ற  அடையாளம்

தமிழ் பேசும் மக்களுடைய வடகிழக்கு நிலப்பரப்பின் அடையாளத்தையும் மொழி என்ற அடிப்படையில் பாதுகாக்க தவறினால் அது முஸ்லிம் மக்களையும் சேர்த்து தான் அழிக்கும்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

எவ்வாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரைக்கும் முஸ்லிம் மக்களுடைய செயற்பாடுகளும் சேர்த்து உலகத்திற்கு வெளிக் கொண்டு வந்தது போன்று இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை மக்களுடைய இந்த போராட்டம் ஒட்டுமொத்தமாக இந்த தமிழர்களுடைய போராட்டமாகவும் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக மிக்கியமான புள்ளி என்பதை விளங்கி கொண்டு எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தில் பங்களிப்பு அவசியம்”என தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

கால்நடை பண்ணையாளர்களின் அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டதுடன் கால்நடை பண்ணையாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காவியுடைகொண்டு எங்களை நசுக்கவேண்டாம், ஆக்கிரமிப்பு சிறிலங்காவின் தேசிய கொள்கையா?, நாங்கள் வாய்பேசாத ஜீவன்கள் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்,அம்பாறை,திருகோணமலை போன்று மட்டக்களப்பில் வேண்டாம், மயிலத்தமடு,மாதவனை எங்கள் சொத்து போன்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

வடகிழக்கு தமிழர் தாயகம், வாழவிடுவாழவிடு எங்களை வாழவிடு, மயிலத்தமடு எங்களது நிலம், சுடாதே சுடாதே கால்நடைகளை சுடாதே போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

இதன்போது போராட்டம் நடைபெற்று நூறாவது நாளை குறிக்கும் வகையில் 100 என்ற தீப்பந்தம் செய்யப்பட்டு அதில் எரித்து தமது போராட்டத்தினை கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு விவகாரம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகும்: கஜேந்திரகுமார் எடுத்துரைப்பு | Today Batticaloa Protest Press Meet Gajedrakumar

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US