கடைசி நிமிடம் வரை சசிகலாவுக்கு நடந்த நெருக்கடி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அவரை பின்தள்ளுவதற்கு பாரிய திட்டமிட்ட சதிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி சிறிஸ்காந்தரூபன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பநிலைகள் மற்றும், கட்சியின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், ''எதிர்வரும் பொதுத் தேர்தலில் சசிகலா போட்டியிட்டு வெற்றியடைவார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது.
கடந்த தேர்தலில் அவர் ஏமாற்றப்பட்டது தொடக்கம் நான்காவது இடத்திற்கு தள்ளிவிடப்பட்டது என்பன தேர்தலில் நடந்த குளறுபடிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்" என்றார்.
இவ்வாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சசிகலா ரவிராஜ் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பிலும், புறக்கணிப்பின் பின்னணி தொடர்பிலும் முழுமையாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
