30 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய தமிழக மீனவர்கள்
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 23 மீனவர்களில் 18 பேர் தமிழகம் திரும்பினர்.
நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த இந்த18 பேரும் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதியன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 15 ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டனர்
இந்தநிலையில் இந்த 18 பேரும் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இதேவேளை 23பேரில் 5 பேர் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri