30 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய தமிழக மீனவர்கள்
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 23 மீனவர்களில் 18 பேர் தமிழகம் திரும்பினர்.
நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த இந்த18 பேரும் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதியன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 15 ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டனர்
இந்தநிலையில் இந்த 18 பேரும் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இதேவேளை 23பேரில் 5 பேர் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan