கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர் சாரதிகள் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றையதினம் (06.05.2024) விசேட அதிரடி படையினரின் சுற்றி வளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிப் பயணித்த ஆறு டிப்பர்களும் அதன் சாரதிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்நிலையில், மணல் மற்றும் டிப்பர் வாகனங்கள் ஆகியவற்றை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |