பரீட்சை எழுத சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம் : விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்
மத்துகம பிரதான பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தின் வாயிலுக்கு அருகில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த மாணவியொருவர் நேற்று காலை நாய் கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 7.45 மணியளவில் அவர் பாடசாலையின் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருந்தபோது, அருகில் இருந்த இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட ஆரம்பித்தன.
இதன்போது மாணவியின் உடலை நாய்கள் தாக்கியதையடுத்து, மாணவி தரையில் விழுந்துள்ளார். நாய் ஒன்று கடுமையாக கடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு
உடனடியாக அங்கிருந்த பெற்றோர்கள் நாய்களை விரட்டி விரைந்து சென்று மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் வைத்திய ஊழியர்கள் அடிப்படை சிகிச்சைகளையும் வழங்கியுள்ளனர்.

பெற்றோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் மாணவ, மாணவியர் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு வர வாய்ப்பு கிடைத்தது.
பரிசோதனையின் பின்னர் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தேவையான பணிகளை செய்ததன் காரணமாகவே தனது மகள் குறித்த நேரத்தில் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam