குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெற்றோர்! யாழ். போதனா வைத்தியசாலையின் மோசமான செயற்பாடு

Sri Lankan Tamils Jaffna Jaffna Teaching Hospital
By Chandramathi May 07, 2024 08:22 AM GMT
Chandramathi

Chandramathi

in சமூகம்
Report

தலை வீக்கம் வருத்தம் உடைய குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பணம் கேட்கப்பட்டதாகவும் யாழை சேர்ந்த தமிழ் முறை வைத்தியர் ஒருவர் தமது குழந்தையை சத்திரசிகிச்சை இன்றி காப்பாற்றியதாகவும் தாயார் ஒருவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு


தலை வீக்க வருத்தம்

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,குழந்தை பிறப்பதற்கு முன்னர் வைத்தியசாலையின் அறிவுறுத்தலின் படி நான் சில மருந்துகளை குடித்தேன். காலில் ஏற்பட்ட தோல் நோய்க்கும் மருந்து குடித்தேன்.

அறுவை சிகிச்சை மூலமே நான் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த 11 நாட்களில் மூளை காய்ச்சல் வந்தது. அதனால் 21 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தோம்.

குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெற்றோர்! யாழ். போதனா வைத்தியசாலையின் மோசமான செயற்பாடு | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor  

இதன்போது குழந்தையின் தலையை ஸ்கேன் செய்து, முதலில் தலையில் சளி என கூறினார்கள் பின்னர் ரத்த கசிவு என்றனர். பின்பு தொடர்ச்சியாக கிளினிக் சென்று குழந்தையின் தலை வளர்ச்சி அளக்கப்பட்டது.

இதன்பின் குழந்தையின் தலையில் நீர் கோர்வை இருப்பதாகவும் மூளையிலிருந்து வெளியேற வேண்டிய நீர் தடைபட்டுள்ளதாகவும் கூறினார்கள். இதற்கான சத்திரசிகிச்சைக்கு 135000 காசு கேட்டார்கள் என கூறியுள்ளார்.

பெற்றோர்கள் தான் பொறுப்பு

இதேவேளை சாத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தை இறந்தால் அதற்கு பெற்றோர்கள் தான் பொறுப்பு என கூறியதாகவும் தாய் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெற்றோர்! யாழ். போதனா வைத்தியசாலையின் மோசமான செயற்பாடு | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor

இதன்பின்னர் யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற தமிழ் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குழந்தை தற்போது நலமாக உள்ளதாகவும் குழந்தையின் தலை பெருக்கும் வருத்தமும் குறைந்துள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் வைத்தியர் கதிர்வேலு ரகுராம் கூறுகையில்,குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு கொடுத்த மருந்து மற்றும் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி செலுத்தியமையே குழந்தையின் இந்த வருத்தத்திற்கு காரணம் என கூறியுள்ளார்.

தாய் அருந்திய மருந்தின் தாக்கம் குழந்தையின் சிறுநீரகத்தை பலவீனம் படுத்தியுள்ளது. இதனால் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆதாரத்தை அழிக்கும் முயற்சி

இரண்டு மாத குழந்தையுடன் என்னிடம் வந்தார்கள் இப்போது 6 மாத குழந்தையாக அவர் நலமாக உள்ளார்.அவருடைய தலை வீக்கம் 85 சதவீதம் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெற்றோர்! யாழ். போதனா வைத்தியசாலையின் மோசமான செயற்பாடு | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor

நான் பல்ஸ் பார்த்து முதலில் எந்த உடல் பகுதி பலவீனமாக உள்ளது என தெரிந்துகொண்டு சிகிச்சை அளித்தேன். எல்லா வருத்தங்களும் கத்தியை எடுத்து சத்திரசிகிச்சை செய்ய கூடாது.

பொதுவாக உடல் சார்ந்த நோய்களின் போது அதன் ஆணிவேரை அறிய வேண்டும். அந்த ஆற்றல் நவீன மருத்துவத்திற்கு இல்லை.

இந்த குழந்தை தற்போது நலமாக இருப்பதை அறிந்து குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வருமாறும் வைத்தியசாலையில் கொடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தை கேட்பதாகவும் தாய் கூறினார்.இதற்கு காரணம் அவர்கள் எழுதிய விபரங்களுடைய இந்த குறிப்பு புத்தகம் எங்களுடைய ஆதாரம் அதை அழிப்பதற்கே இந்த தடுப்பூசி முயற்சி என வைத்தியர் கூறியுள்ளார்.

தமிழ்வின் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் செயல்!

தமிழ்வின் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் செயல்!


31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US