கொழும்பிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பயணிகளுக்கு தீவிர பாதுகாப்பு
கொழும்பிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அவற்றை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஹோட்டல்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலா விடுதிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்புச் சிக்கல்கள்
கொழும்பு சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், தற்போது சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan