3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய - அவிட்டாவ பகுதியில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளதுடன் அவர்களின் சொத்துக்களையும் குறிப்பிட்ட நபர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறிப்பிட்ட நபர் யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
