கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து: படுகாயமடைந்த சாரதிக்கு கோவிட் தொற்று உறுதி(Photos)
கிளிநொச்சியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்தில் விழுந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இவரைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முன்னர் அவருக்கு எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இவருடன் பயணித்த மற்றொருவரைக் காணவில்லை எனச் சாரதியின் வாக்குமூலத்தை
அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது.








