யாழில் முச்சக்கரவண்டி விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி
யாழ். (Jaffna) மானிப்பாய் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (23.06.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் - கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, குறித்த முச்சக்கர வண்டி எதிரே வந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam