தென்னிலங்கையில் சடலத்துடன் மயானத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
எல்பிட்டிய மயானத்தில் சடலமொன்றுக்கு தீவைக்கச் சென்ற இரு இளைஞர்கள் மற்றும் சுடுகாடு ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று பிற்பகல் எல்பிட்டிய, பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலம் எல்பிட்டிய மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் ஆலோசனைக்கமைய காகிதத்தை பயன்படுத்தி சடத்தை எரிப்பதற்கு குறித்த மூவரும் முயற்சித்துள்ளனர்.
இதன் போது தீ வைத்தவர்கள் மீது தீப்பரவியமையினால் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தடைப்படவில்லை என்றால் ஒரு பொத்தானை அழுத்தி சடலத்தை எரிக்க முடியும். மின்சார தடையால் குறித்த மூவரும் இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளதாக காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
