இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த இருவரும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட விசாரணை
இந்நிலையில், நடுக்கடலில் கடற்றொழிலாளர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam