வாடிக்கையாளர் வேடமணிந்த புலனாய்வு அதிகாரி! சுற்றிவளைப்பில் சிக்கிய கருக்கலைப்பு வைத்தியர்
பேருவளையில் கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு இன்று(8) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியர் கைது
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று இன்று (8) குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம்
சுற்றிவளைப்பின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், அவர் ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதைத் தொடர்ந்து, குறித்த வைத்தியரின் உதவியாளர் அந்த விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொகையையும் வழங்குவதாகக் கூறி, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri