யானை தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி மூன்று விவசாயிகள் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, பொலனறுவை - திம்புலாகல, மெதிரிகிரிய - நவநகர மற்றும் சாலியவெவ - நிலபம்மா ஆகிய மூன்று பிரதேசங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்
இதன்படி, பொலனறுவை - திம்புலாகல பிரதேசத்தில் 47 வயதான டி.எம்.செனவிரத்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரிய - நவநகர பிரதேசத்தில் டி.பி.டி.ஜி. சரத்சந்ர என்ற 65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
சாலியவெவ - நிலபம்மா பிரதேசத்தில் ஆர்.பீ.டீ.பிரேமதாச என்ற 76 வயதான வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.



