முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிப்பு
முல்லைத்தீவில் மூன்று பிரதேசங்கள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, புதுக்குயிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் காவல்துறை பிரதேசங்களே மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை,நாடுபூராகவும் மூன்று நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நான்கு மணிமுதல் தளர்ப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பணிபுரிபவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரமே வெளியில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.