அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள சரத் வீரசேகர: சந்திம வீரக்கொடி வலியுறுத்தும் விடயம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புரிமை மீறல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயற்படுகிறது. இங்கு இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும் நாடாளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் 'நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாமல் கடந்த மாதம் 19ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே இவ்விடயம் முற்றிலும் தவறானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 12 நிமிடங்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
