50 நாட்களில் ஆயிரத்தை கடந்த கோவிட் மரணங்கள் - திணறும் இலங்கை! செய்திகளின் தொகுப்பு
தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்ட ஏப்ரல் 14ஆம் திகதிக்குப் பின்னர் நேற்றைய தினம் வரையான 50 நாட்களில் இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 600 ஆகக் காணப்பட்டதுடன், ஏப்ரல் 13ஆம் திகதி பின்னர், 14ஆம் திகதி முடிவடையும் போது அந்த எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு அமைய மே மாதம் மூன்றாம் திகதி முடிவடையும் போது கோவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 608 ஆக அதிகரித்திருந்தது.
அந்த காலப்பகுதியில் கடந்த 50 நாட்களில் மாத்திரம் கோவிட் காரணமாக ஆயிரத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,