சர்ச்சைக்குரிய யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச செயலர் முக்கிய தகவல் (Video)
யாழ். தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (04.05.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கு தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் நேற்றுமுன் தினம் முதல் (03.05.2023) பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விகாரை அமைந்துள்ள நிலங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு
இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என்பதை தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விகாரை அமைந்துள்ள நிலங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை தருமாறும் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்‘‘ குறிப்பிட்டுள்ளார்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
