கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூன்றாவது நாளாக முன்னெடுப்பு
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் (06.07.2024) இடம்பெற்றிருந்தது.
குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, வைத்தியர் சுபுண், கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
மனித எச்சங்கள்
அந்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக விஷேட ஸ்கான் பரிசோதனையில் தெரிய வந்திருந்தது.
இதன் போது புதிதாக தகர கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு மேலதிக மண்கள் வெளியேற்றப்பட்டிருந்தது. இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற துணி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளையதினம் விடுமுறை வழங்கப்பட்டு நாளைமறுதினம் திங்கட்கிழமை (08.07.2024) நான்காவது நாள் அகழ்வு பணி தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
