திக்கம் வடிசாலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்: பனைசார் உற்பத்தியாளர்கள்
“திக்கம் வடிசாலையை ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய முழுமையான பணத்தினை தாம் வழங்குவதாகவும்” பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (13.10.2022) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது
“திக்கம் வடிசாலை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த அரசியல் காரணங்கள் தடையாக இருந்தமையால் அங்கிருந்த பலகோடி பெறுமதியான பனம் சாராயம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்து.
அதனை மீள இயக்குவதற்கு தனியார் ஒருவரிடம் வழங்குவது தொடர்பாக நேற்றைய பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போதே “தனியாருக்கு ஒருபோதும் வடமராட்சி திக்கம் வடிசாலையை வழங்க முடியாது” என வடமாகணம் மற்றும் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட பனை தென்னை வள உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதி தீர்மானம்
இதே வேளை கொழும்பில் சந்தித்து இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான்
ரத்வத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை
அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, வடமராட்சி வடக்கு பிரதேச
செயலர் ஆ.சிறி, வடமாகணம் மற்றும் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட பனை தென்னை வள
அபிவிருத்தி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சம்மேளன பிரதிநிதிகள், அரச உயர்
அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



