மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (26.09.2023) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். வடகிழக்கு முன்னேற்ற கழக தலைவர் கு.வி.லவக்குமார், மட்டுமாநகரசபை முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் வணபிதா ஜோசப் மேரி வலிந்து காணாமல் போன உறுவுகள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தீயாக தீபம் தீலிபனின் இறுதி மூச்சான 10.48 மணிக்கு அன்னாரது திரு உருவபடத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர்தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் தூக்குக் காவடியுடன் திலீபனுக்கு அஞ்சலி! பலரும் நெகிழ்ச்சி (Photos)



