தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சவால்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு (NMRA) புதிய தலைவரை நியமிப்பதில் புதிய சுகாதார அமைச்சர் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவராக முன்னணி மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் விரும்பியதாக, அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதிலும், பல முக்கியமானவர்கள், வேறு பல ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர், எனினும் அதற்கு அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
நியமனக் கடிதம்
இதனையடுத்து மருத்துவர் விஜேவிக்ரமவின் நியமனத்தை அவர் இறுதி செய்துள்ளார் எவ்வாறாயினும், அமைச்சின் செயலாளர் நியமனக் கடிதத்தை தயார் செய்யாத காரணத்தால், நேற்று விஜேவிக்ரமவிற்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.
தற்போதைய தலைவர் பேராசிரியர், என்.எம்.ஆர்.ஏ. ஜயரத்ன அண்மைக்காலத்தில் தரம் குறைந்த மருந்துகளின் வருகை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் இதேவேளை, ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகரவும் பதவி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
