திருட்டு ஜோடி கைது: பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள
வீடொன்றில் இன்று அதிகாலை 20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகையும், இரு
கைத்தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களை நடத்திவரும் தந்தை மற்றும் மகன் வசித்து வரும் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சந்தேகநபர் எவ்வாறு உள்ளே நுழைந்துள்ளார் என்பது தெளிவாக தெரியாத நிலையில் வீட்டின் உரிமையாளர் பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.
பதுளை
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அந்தப் பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் சுற்றிவளைப்பு
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் தலைமையக அதிகாரிகள் குழுவால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் தம்பதியிடம் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்கள்
கணிணி துணைக்கருவிகள், எரிவாயு கொள்கலன்கள் மற்றும் மின் சாதனங்கள் உட்பட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை தலைமையகப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |