நாய் ஒன்றினால் பரிதாபமாக உயிரிழந்த யுவதி
தென்னிலங்கையில் இளம் ஜோடி ஒன்று பயணித்த மோட்டார் சைக்கிளில் நாய் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தேபான பிரதேசத்தை சேர்ந்த நிமேஷா அன்ஸனி என்ற 18 வயதுடைய யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி காலை 7.45 மணியளவில் இந்த ஜோடி கோப்பியவத்தை பிரதேசத்தை நோக்கி பயணிக்கும் போது நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது யுவதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri