தேர்தல் பட்டியலில் பெயரை உள்ளடக்குமாறு கத்தியை காட்டி மிரட்டிய பெண்
ஹுங்கம பிரதேசத்தில் கிராம சேவரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூர்மையான ஆயுதம் ஒன்றை காட்டி, தேர்தல் பட்டியலில் பெயரை உள்ளடக்குமாறு கிராம சேவகரை அச்சுறுத்திய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 51 வயதுடைய பெண் என ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றால் தேர்தல் பட்டியலுக்கமைய மேற்கொள்ளப்படும். இதனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.