வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்:பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊர் மக்கள் கோரிக்கை(Photos)
வவுனியா மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளிக்குளம் - சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகள் அட்டகாசம்
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்கு நுழையும் காட்டு யானைகள் கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென கிராமத்திற்குள் நுழைகின்ற காட்டு யானைகளினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அத்துடன் ஊருக்குள் யானை நுழைந்ததை அறிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்ததுடன் அதனை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
சமீப காலமாக காட்டு யானைகள் கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதினால் இரவு வேளையில் மக்கள் நித்திரையின்றி விழித்திருக்கின்றனர்.
இதனால் பல்வேறு உடல் உள உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர்.
எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
