இந்தியாவில் குழந்தை மீது விழுந்த டிவி: பரிதாபமாக பிரிந்த உயிர்
இந்திய(India) மாநிலம் கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை மீது டிவி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு(24.06.2024) 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்,கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ் என்பவரின் அப்துல் சமத் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
படுகாயமடைந்த குழந்தை
குறித்த குழந்தை மீது நேற்றிரவு(24) டிவியானது அதன் மேசையுடன் விழுந்துள்ளது.
இதனைதொடர்ந்து, படுகாயமடைந்த குழந்தை உடனடியாக அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும், டிவி வைக்கப்பட்டிருந்த மேசையை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
