தென்கொரிய தீ அனர்த்தத்தில் பலர் பலி - இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
தென் கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சியோல் தலைநகர் ஹ்வாசோங்கில் உள்ள அரிசெல் தொழிற்சாலையில் பல லித்தியம் பட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது தொழிற்சாலையில் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிய வருகிறது.
தீ விபத்து
தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 18 சீன பிரஜைகள், 2 லாவோ பிரஜைகள் மற்றும் இரண்டு தென் கொரிய தொழிலாளர்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மூவர் தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.