கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து
கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தொடருந்து இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தின் போது அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam