ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்! அறிவுசார் சமூகத்தை வற் வரி அழிக்கின்றது என்றும் சாடல்

Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Jun 23, 2026 04:36 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

புத்தக அச்சுப் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் புத்தக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மாஸ்டர் பிளான்! அரசாங்கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இரகசிய தகவல்

சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மாஸ்டர் பிளான்! அரசாங்கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இரகசிய தகவல்

பெரும் நட்டம்

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தகங்களுக்கு விதிக்கப்படும் வற் வரி மற்றும் அதன் வரம்பெல்லை முறையினால் தற்சமயம் அச்சுத்துறையில் பல்முனைப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் காணப்படும் புத்தகங்கள் மீது கூட இந்த வரிகள் விதிக்கப்படுவதனால் பதிப்பகங்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படுகின்றது.

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்! அறிவுசார் சமூகத்தை வற் வரி அழிக்கின்றது என்றும் சாடல் | The Tax Problem Facing Sri Lankans

இந்நிலைமையினால் உள்நாட்டு அச்சுப் பதிப்புத்துறையும், புதிய அறிவு உருவாக்கமும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த வாசிப்புச் சமூகத்துக்கும், சிங்கள, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலான வெளியீட்டுத் துறையின் எதிர்காலத்துக்கும் விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும்.

கல்வியறிவை மேம்படுத்த காகிதம் மற்றும் ஏனைய அச்சுப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரிகள் எவ்விதத்திலும் சாதகமானதாக அமையவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு 'அறிவு சார்ந்த நாட்டை கட்டியெழுப்புவோம்' எனப் பல நல்ல கருத்துக்களை வெளியிட்டார்.

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்! அறிவுசார் சமூகத்தை வற் வரி அழிக்கின்றது என்றும் சாடல் | The Tax Problem Facing Sri Lankans

18 சதவீத வற் வரியை நீக்குவோம் எனத் தனது கொள்கைப் பிரகடன அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று நடைமுறையில் அந்த வாக்குறுதிகள் எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு இப்போதாவது அந்த வாக்குறுதிகளைச் செயல் வடிவத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

உலக நாடுகள் பலவற்றில் பதிப்புகள் மற்றும் வெளியீடுகள் துறைக்கு அதிகளவில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியம், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் கூட புத்தகங்களுக்கு இவ்வாறான வற் வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் வெளியீட்டுத் துறைக்கு என்று பொறுப்புக் கூறக்கூடிய ஒரு சரியான அமைச்சு கூட இல்லை.

அரசு, சர்வதேச நாணய நிதியம் கூறுவதற்கு ஏற்ப மாத்திரம் நடப்பதற்குப் பதிலாக, தேசிய நலனைப் பாதுகாத்துக்கொண்டு இந்த வெளியீட்டுத் துறை மீதான வரியை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புத்தகங்களின் விலைகளைக் குறைத்து, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதுடன், ஒரு வலுவான அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGallery

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

சுரேஷ் சலே விவகாரம்! GSP+ சலுகைகளை இழக்கும் அபாயத்தில் இலங்கை

சுரேஷ் சலே விவகாரம்! GSP+ சலுகைகளை இழக்கும் அபாயத்தில் இலங்கை

மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US