ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி திங்கள் முதல் ஆரம்பம்
இலங்கையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க கடந்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் உள்ள 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
அமைச்சில் வைத்து இன்று ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் நேரடி தலையீடு காரணமாக, இந்த பணி விரைவில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று காலை அனைத்து மாகாண ஆளுநர்கள், தலைமை செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோருடன் கலந்துரையாடபட்டுள்ளது.
இந்தவேளை தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பாடசாலைகளை முதல் கட்டமாக விரைவில் திறக்கமுடியும் என்று அமைச்சர் கூறினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
