துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரின் முகத்தை கடித்த மாணவி!
17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் க.பொ.த (சாதாரண தர) நடைமுறைப் பரீட்சை பயிற்சிக்காக பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நபர் ஒருவர் குறித்த மாணவியை துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவி தனது கிராமத்திற்குச் செல்லும் வழித்தடத்தில் வந்த ஒருவர், சாலையைக் கடந்து, மாணவியைத் தாக்கி, அருகிலுள்ள வெறிச்சோடிய ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர், தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது, குறித்த நபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதால், கடந்த காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri