பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களுக்கு அவசர கடிதம்
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட அமைதி போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினி சிறப்பு அறிக்கையாளர்கள் இருவருக்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் (Ahmed Shaheed) மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் (Karima Bennoune) ஆகியோருக்கே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கீழ்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக சம்மேளனம் குறித்த சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இக் கடிதம் நேற்றைய தினம் மாலை குறித்த இரு விசேட அறிக்கையாளர்களிற்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவை தொடர்பில் ஐ.நாவின் பொதுச் செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து நாடுகளின் துாதரகங்களிற்கும் தெரியப்படுத்தி இப் பேரணிக்கான முழுமையான ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்படும் என ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழர்களின் கோவில்களை அழித்த பின்னர் பௌத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் தமிழ் பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் தமிழின் பாரம்பரிய, வரலாற்று இடங்களை சிங்கள பகுதிகளாக மாற்றுவது.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும் தகனம் செய்யப்படுகிறார்கள்.
மலையகத்தில் உள்ள தமிழர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் பகுதிகளின் இராணுவமயமாக்கல் தொடர்கிறது, சிங்கள மக்களுக்கு ஆதரவாக தமிழர்களின் வரலாற்று அடையாளம் அழிக்கப்படுகிறது, தமிழர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றும் சிங்கள குடியேற்றங்கள்.
தமிழ் கால்நடை உரிமையாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் வசிக்கும் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கால்நடைகள் கொல்லப்படுகின்றன.
தமிழ் இளைஞர்களை குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்களுக்கு அரசாங்கம் தவறாமல் மன்னிப்பு வழங்கியுள்ளது, ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன, ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு பதில் அளிக்க மறுக்கிறது.
தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்ட தங்கள் உறவுளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர், இது நினைவு நிகழ்வுகளை மறுப்பதன் மூலமும், இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதன் மூலமும், நினைவுச் சின்னங்களை இடிப்பதன் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இந்த முறைகேடுகளை எதிர்க்கும் தமிழ் சமூக ஆர்வலர்களையும் அரசாங்கம் குறிவைக்கிறது.









தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
