முன்னணி அரசியல் தலைவரின் பணத்தை மோசடி செய்த செயலாளர்
நாட்டின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவரின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றிய ஒருவர், செய்த நிதி மோசடி காரணமாக, அவரை அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நபர், குறித்த தலைவரின் பணம் மீளபெறும் அட்டையை பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் இருந்து நீண்டகாலமாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நபரை சம்பந்தப்பட்ட முன்னணி அரசியல் தலைவர் “முட்டாள் பேய்” என ஒரு முறை பகிரங்கமாக திட்டியிருந்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றும் உதித் லொக்கு பண்டாரவை, மகிந்த ராஜபக்ச ஒரு முறை ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக திட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டாரவின் புதல்வராவார்.