பொலிஸ் காவலரணில் கொள்ளையிட்ட நபர்கள்
கொழும்பு - தெமட்டகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் மிஹிந்துசேத்புர பொலிஸ் காவலரணில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த நபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் பணம், அலைபேசி, பணப் பை, பொலிஸ் அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டை உட்பட 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவற்றை தாம் ஆற்றில் வீசி விட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.