காட்டு யானைகளின் அட்டகாசம்: பயன் தரும் தென்னை மரங்கள் அழிப்பினால் மக்கள் பாதிப்பு
தொடக்கம் இன்று வரை மக்களின் வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், அதிகளவான தென்னை மரங்களையும் அழித்து வருவதாகவும் இதற்கான தீர்வு இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கவலை தெரிவித்துள்ளார்.
பன்சேனை மற்றும் புல்லுமலை பகுதியில் இன்று (16) அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் ஊடுருவிய காட்டு யானைகள் விவசாயிகளின் குடிசையினையும் பல தென்னை மரங்களையும் அழித்து சேதப்படுத்தியுள்ளது.
இந்த அனர்த்தத்தை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
காட்டு யானை பிரச்சனை
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த ஏழு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான், ஏறாவூர் பற்று (செங்கலடி ) வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 950 தொடக்கம் 1200 எண்ணிக்கையிலான தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்து துவசம் செய்துள்ளது.

இவ்வாறான பயன் தரும் தென்னை மரங்கள் அழிப்பின் தாக்கத்தை அன்றாடம் கூலி தொழில் புரிந்து, வாழ்க்கை நடாத்தி வரும் இம்மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர்.
இது எதிர்காலத்தில் உள்ளூர் கிராமிய தேங்காய் உற்பத்தியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதிக்கச் செய்யும். இந்த விடயங்களை நான் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களிலும் கூறியுள்ளேன்.

எனினும், இந்த மாவட்ட மக்களின் காட்டு யானை பிரச்சனைக்கு தீர்வு இல்லாமலே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan